திடீரென தனது திருமணத்தை ரத்து செய்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்! என்ன காரணம்?
நியூசிலாந்தில் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டின் சமூக பரவலை கட்டுப்படுத்த நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அவரது திருமணத்தை ரத்து செய்துள்ளார்.
நியூசிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் முகக்கவசம் விதிகள் அமுலுக்கு வரும் மற்றும் மக்கள் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்.
அதாவது பார்கள், உணவகங்கள் மற்றும் திருமணம் போன்ற உட்புறங்களில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள 100 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தடுப்பூசி பாஸ் பயன்படுத்தாத நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் 25 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் காரணமாக திட்டமிட்டபடி தனது திருமணம் நடக்காது என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
இதேபோன்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் வருத்தம் தெரிவித்தார்.
எனினும், ஆர்டெர்ன் தனது திருமண திகதியை வெளியிடவில்லை, ஆனால் உடனடியாக ஆர்டெர்ன் திருமணம் நடக்கும் என வதந்திகள் பரவி வருகிறது.