சட்டவிரோத குடியேறியால் புதிதாக நிச்சயிக்கப்பட்ட தம்பதிக்கு நேர்ந்த சோகம்
Newly engaged ohio couple crushed car by immigrant: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியால் இளைஞர் உயிரிழக்க, அவரது வருங்கால மனைவி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் புதிதாக நிச்சயிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேறி ஒருவரால் கொல்லப்பட்டார்.
திருமண நிச்சயதார்த்தம்
ஓஹியோவில் 23 வயது இளைஞரான கேமரூன் லயன் மற்றும் அவரது கல்லூரி காதலி அப்ரியல் கெர்ன்ஸ் (22) இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
கடந்த 6ஆம் திகதி, இந்த தம்பதி காரில் சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் கேமரூன் லயன் உயிரிழந்தார்.
அவரது காதலி காதலி அப்ரியல் கெர்ன்ஸ் படுகாயமடைந்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் அல்வாரோ யூரிப்-கோன்சலஸ் என்ற 33 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவர் சட்டவிரோத குடியேறி என்று விசாரணையில் தெரிய வந்தது.
மாநில நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் யூரிப்பை தேடிக்கொண்டிருந்தபோது, அவர் தனது வாகனத்தைத் திருப்ப முயன்றபோது இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டவர்
சந்தேக நபரான யூரிப், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதாகவும், இதற்கு முன்னர் ட்ரம்ப் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்டவர் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பின்னர் உறுதிப்படுத்தியது.
அவர் மீது மோசடியான வாகனக் கொலை, மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனம் இயக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், துயரச் சம்பவத்திற்குப் பிறகு கெர்ன்ஸின் மருத்துவச் செலவுகளுக்காகவும், அவருக்கு ஆதரவளிக்கவும் அவரது குடும்பத்தினர் நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |