ஒரே இடத்தில் பல சவப்பெட்டிகள்! திருமணம் நடந்த அதே இடத்தில் புதைக்கப்பட்ட உடல்... கதறும் உறவுகள்
நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் என்று கருதி பொதுமக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அதில் இறந்த நபரின் உடல் அவருக்கு திருமணம் நடந்த அதே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் கடந்த சனிக்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் என்று கருதி பொதுமக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
துரதிர்ஷ்டவசமான இந்த உயிர் இழப்புகளுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த ராணுவம், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடல் நேற்றிரவு, அடக்கம் செய்யப்பட்டது.
இறந்தவர்கள் அனைவருமே ஓடிங் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். இந்த இறுதி சடங்கின் காட்சிகள் மனத்தை கனமாக்குகின்றது.
ஒரு பெண், தன்னை தேற்றிக்கொள்ள இயலாமல் அழுவதும் , ஒரே இடத்தில் பல சவப்பெட்டிகளை சூழ்ந்து கதறும் உறவுகளும், துயரமும் துக்கமும் சூழ்ந்த அந்த இறுதி சடங்கின் காட்சிகள் இந்தியாவையே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறுதிச்சடங்கின் போது நடந்த ஒரு விடயம் காண்போர் கண்களை குளமாக்கியது. அதன்படி சுட்டு கொல்லப்பட்டவர்களில் 38 வயதான நபருக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை தான் திருமணம் நடந்தது.
எந்த இடத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றதோ அதே இடத்தில் அடுத்த ஒரு வாரத்தில் அவர் உடல் புதைக்கப்பட்டது தான் பெரும் சோகம்.!!