புதுமணத்தம்பதிக்கு இதெல்லாம் தேவையா? உலகளவில் வைரலான வீடியோ, புகைப்படங்கள்
புதுமணத்தம்பதி ஒன்று நடத்திய ஃபோட்டோஷுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பெரியளவில் வைரலாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உலகின் மிகவும் ஆபத்தான ரயிலில் அவர்கள் ஃபோட்டோஷுட் நடத்தியது தான்.
குரோஷியாவைச் சேர்ந்த Kristijan Ilicic (35) மற்றும் அவர் மனைவி Andrea Trgovcevic (29) தம்பதிக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் Northwest Africaவில் உள்ள Mauritaniaக்கு தேனிலவு சென்றனர்.
தங்கள் தேனிலவு தனித்தன்மையாக இருக்க வேண்டும் என முடிவு செய்த தம்பதி ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக 700 கிலோ மீட்டர் தூரம் 20 மணிநேரம் செல்லக்கூடிய ரயிலில் ஃபோட்டோஷுட் நடத்தியுள்ளனர்.
2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலில் 200 பெட்டிகளுக்கும் மேல் உள்ளது. அத்தனை பெட்டிகளிலும் இரும்புத்தாது துகள்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும். பகலில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் அதிகமாகவும், இரவில் ஜீரோ டிகிரி வெப்பநிலைக்கும் கீழாக குறைந்து புழுதிகள் அடங்கிய கடுமையான பயணமாக இருக்கும்.
உலகின் ஆபத்தான ரயிலில் தான் அவர்கள் ஃபோட்டோஷுட் நடத்தியுள்ளனர். அதுவும் ஆபத்தான போஸ்கள் எல்லாம் கொடுத்து அந்த தம்பதி இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.
Kristijan கூறுகையில், நாங்கள் ஏற்கனவே உலகில் உள்ள 150 நாடுகளுக்கும் மேல் சென்றுள்ளோம். தாய்லாந்து, சீஷெல்ஸ், அருபா, குராக்கோ, பஹாமாஸ், செயின்ட் லூசியா, மொரீஷியஸ் போன்ற பல அழகான கடற்கரைகளை நாங்கள் இருவரும் பார்த்திருக்கிறோம்.
Mauritania மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட சுற்றுலாத் தலமாக உள்ளது என்பதை அறிந்துள்ளோம். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் 6,000 பேருக்கு மேல் வருகை தராத இடமாக இது உள்ளது.
இங்கு நாங்கள் சென்ற கிராமத்தில் இருந்த மக்கள் அவர்கள் பாரம்பரிய கலாச்சார முறைப்படி எங்களுக்கு திருமண நிகழ்ச்சியை நடத்தி மகிழ்வித்தார்கள் என கூறியுள்ளனர்.
இவர்களின் ஃபோட்டோஷுட் வைரலானாலும் இப்படியெல்லாம் கூடவா ரிஸ்க் எடுப்பாங்க, இதெல்லாம் தேவையா என தம்பதியை பலரும் விமர்சித்துள்ளனர்.