அரசு சார்பில் மளிகை கடைகள், 30 சதவீத தள்ளுபடி - நியூயார்க்கில் தொடங்க உள்ள மம்தானி
நியூயார்க்கில் அரசு சார்பில் 5 மளிகை கடைகள் அமைக்கப்படும் என மேயர் மம்தானி அறிவித்துள்ளார்.
நியூயார்க் அரசு சார்பில் மளிகை கடை
நியூயார்க் மேயர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசு சார்பில் மளிகை கடைகள் அமைக்கப்படும், மலிவு விலையில் உணவுகள் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை மம்தானி வழங்கினார்.
அதன்படி, இன்று நியூயார்க் அரசு சார்பில் 5 மளிகை கடைகள் அமைக்கப்படும் என மேயர் மம்தானி அறிவித்துள்ளார்.

முதல் மளிகைக் கடை 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிராங்க்ஸில் உள்ள ஹன்ட்ஸ் பாயின்ட்டில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஹார்லமில் உள்ள லா மார்குவேட்டா உட்பட, 5 கடைகளும் ஒவ்வொரு பெருநகரத்திற்கும் ஒன்று என தனது முதல் பதவிக்காலத்தின் இறுதிக்குள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, NYCEDC உடன் இணைந்து 70 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளார்.

காய்கறிகள், பழங்கள், ரொட்டி, முட்டை, இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் 30 சதவீத தள்ளுபடியில் விற்கப்படும் எனவும், தள்ளுபடி விலைகள், ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
At our five-borough municipal grocery stores, New Yorkers will get a 30% discount on eggs, milk, chicken, fresh produce and other everyday essentials.
— Mayor Zohran Kwame Mamdani (@NYCMayor) July 27, 2026
In the wealthiest city in the richest country in the world, no one should have to wonder how they’ll afford the food they need… pic.twitter.com/zbNVS735bg
இந்த கடைகளை நிர்வகிப்பதற்கு மளிகைக் கடை நடத்துனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடையின் வாடகை, பராமரிப்பு மற்றும் சொத்து வரிகளுக்கான செலவுகளை நியூயார்க் அரசு ஏற்கும்.
விலைவாசி உயர்வு மற்றும் உயர்ந்து வரும் இதர செலவுகள் காரணமாக நியூயார்க் நகரவாசிகள் மாளிகைப்பொருட்கள் வாங்க சிரமப்படுவதாக தெரிவித்துள்ள மம்தானி, அரசு மளிகை கடைகளில் வாங்குவதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 1000 டொலர் சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |