அடுத்த கட்டத்திற்கு தயார்... இஸ்ரேல் ராணுவ வீரர்களிடம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூசகம்
காஸா பகுதிக்கு வெளியே முகாமிட்டுள்ள இஸ்ரேலிய வீரர்களை நேரில் சந்தித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டம் உடனே துவங்கப்படும்
ஆனால், அடுத்த கட்டம் என்றால் என்ன என்பது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கமேதும் அளிக்கவில்லை எனவும், அடுத்த கட்டம் உடனே துவங்கப்படும் என மட்டும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
@reuters
இஸ்ரேலிய காலாட்படை முதல் முதலில் காஸா பகுதிக்குள் நுழைந்து வெள்ளிக்கிழமை தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. தெற்கு இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஹமாஸ் தொடுத்த தாக்குதலுக்கு பின்னர், இஸ்ரேலிய காலாட்படை முதல் முதலில் காஸாவுக்குள் நுழைந்துள்ளது.
மேலும், பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் தற்போதுதான் தொடங்கியுள்ளது என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள், இஸ்ரேலின் கண்மூடித்தனமானத் தாக்குதலைத் தவிர்ப்பதற்காக தெற்கே தப்பிச் செல்ல 24 மணிநேரம் அவகாசம் அளிக்கப்பட்டது.
@reuters
பலி எண்ணிக்கை 2,200
ஆனால் கடைசி சொட்டு இரத்தம் சிந்தும் வரையில் போராடுவதாக உறுதியளித்துள்ள ஹமாஸ், பொதுமக்களை வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. சாலை ஊடாக தப்பிச் செல்லும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இலக்கு வைத்து தாக்குவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் தெரிவிக்கையில், ஆயத்த நிலையில் இருக்கும் ராணுவத்தினர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
@reuters
ஹமாஸ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் கடந்த 7 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதுவரை இப்பகுதியில் பலி எண்ணிக்கை 2,200 கடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |