இந்தியா, இங்கிலாந்து போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த நபருக்கு நேர்ந்த கதி! என்ன ஆனார் தெரியுமா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் மைதானத்திற்குள் நுழைந்த நபர் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் புகார் கொடுத்துள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும், நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாம் நாளான இன்று சற்று முன் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டி துவங்கியதில் இருந்தே, அந்த நாட்டைச் சேர்ந்த ஜார்வோ என்ற ரசிகர் ஒருவர் அவ்வப்போது மைதானத்திற்குள் இந்திய அணியின் உடை அணிந்து நுழைந்தார்.
இது ஆரம்பத்தில் ரசிக்கப்பட்டாலும், அதன் பின் அவர் தொடர்ந்து இப்படி செய்தது, வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்குமே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் கேலியாக இருந்த இந்த விஷயம் தற்போது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
ஏனெனில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இது போன்ற விடயங்களை எவ்வாறு அனுமதிக்கிறது ? என்றும் மைதான காவலர்களை மீறி இவ்வளவு எளிதாக எப்படி இவர் வருவதை அனுமதிக்கிறார்கள் ? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் நேற்று சவுத் லண்டன் பொலிசார் ஓவல் மைதானத்தில் அத்துமீறி நுழைந்த காரணத்திற்காக ஜார்வோவை கைது செய்யப்பட்டுள்ளார்.