திணறிக்கொண்டிருக்கும் பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்த இருக்கும் ஒரு செய்தி...
*பிரித்தானிய செவிலியர்கள் வேலைநிறுத்தம் செய்யத் திட்டம்.
*வேலை நிறுத்தத்தில் மருத்துவர்களும் இணைந்துகொள்ள இருப்பதாக எச்சரிக்கை.
பிரித்தானிய மருத்துவமனைகள் ஏற்கனவே மருத்துவர்கள், செவிலியர்கள் முதலான ஊழியர்கள் பற்றாக்குறையில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் வேலை நிறுத்தம் செய்யத் திட்டமிட்டு வருகிறார்கள்.
ஊதிய உயர்வு கோரி அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
Credit: Getty
அமைச்சர்கள் செவிலியர்களுக்கு 4 முதல் 10 சதவிகித ஊதிய உயர்வு அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அது அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ள செவிலியர்கள், 17 சதவிகித ஊதிய உயர்வு கோருகிறார்கள்.
இந்நிலையில், பிரித்தானிய மருத்துவர்களும் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக பிரித்தானிய மருத்துவக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஊதிய உயர்வு கோரி செவிலியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.