ஸ்தம்பிக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்... நடைபாதையில் இறக்கும் நோயாளிகள்

England
By Arbin Jan 16, 2025 04:28 PM GMT
Report

பிரித்தானியாவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் நிலையில், சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் நடைபாதையிலேயே இறக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய அரசாங்கத்தின் மீது

பிரித்தானியாவின் ராயல் நர்சிங் கல்லூரி இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், இதுவரை பிரித்தானியா முழுவதும் 5000 ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன நிறுத்துமிடம், குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் நோயாளிகளுக்கான தற்காலிக பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்தம்பிக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்... நடைபாதையில் இறக்கும் நோயாளிகள் | Nhs Trusts Declared Critical Incidents

இப்படியான செயற்பாடுகள் நோயாளிகளை ஆபத்தில் தள்ளும் என்றும் ஆக்ஸிஜன், இதய கண்காணிப்பு கருவிகள் மற்றும் உறிஞ்சும் கருவிகள் போன்ற முக்கிய உபகரணங்களை செவிலியர்களால் அணுக முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் இந்தப் பிரச்சினைகளைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று ஒப்புக்கொள்வதாக தெரிவித்திருந்தாலும், முந்தைய அரசாங்கத்தின் மீது பழி சுமத்தியுள்ளார்.

நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றால் குடியுரிமை பறிக்கப்படும்... ஐரோப்பிய நாடொன்று திட்டம்

நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றால் குடியுரிமை பறிக்கப்படும்... ஐரோப்பிய நாடொன்று திட்டம்

கடந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட NHS அறக்கட்டளைகள் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான காய்ச்சல் நோயாளிகள் மற்றும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளை நாடியயுள்ளதை அடுத்து பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

400 பக்க அறிக்கை

இதனிடையே வெளியான தரவுகளில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 5,400 ஆக இருந்த காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் சராசரியாக 5,000 க்கும் குறைவாகக் குறைந்தது என தெரியவந்துள்ளது.

ஸ்தம்பிக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்... நடைபாதையில் இறக்கும் நோயாளிகள் | Nhs Trusts Declared Critical Incidents

இந்த நிலையில், ராயல் நர்சிங் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள 400 பக்க அறிக்கையில், அவசர சிகிச்சை அளிக்க ஏற்படும் தாமதம் காரணமாக நோயாளிகள் மாரடைப்பால் இறக்கிறார்கள் என்றும், ஒரு செவிலியர் மட்டுமே பலரையும் கவனிக்கும் நிலை இருப்பதால் காத்திருப்பு அறைகளில் தள்ளுவண்டிகள் மற்றும் நாற்காலிகளில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் அடுத்த திட்டம் இதுதான்: எச்சரிக்கும் முன்னணி நிபுணர்

ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் அடுத்த திட்டம் இதுதான்: எச்சரிக்கும் முன்னணி நிபுணர்

மருத்துவமனை நடைபாதைகளில் காத்திருக்கும் நோயாளிகள் 20 முதல் 30 பேர்களுக்கு ஒரு நர்ஸ் மட்டுமே அனுமதிக்கப்படும் நெருக்கடியும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US