நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை
தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை
தேசிய புலனாய்வு முகமை தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, கோவை, திருச்சி, சிவகங்கை, தென்காசி ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நிர்வாகிகள் வீட்டில் சோதனை
திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சியில் முன்னணி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையை நடத்தி வருகின்றனர்.
அதைப்போல விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நெல்லை மதிவாணன் வீட்டிலும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தென்னகம் விஷ்ணு வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
NIA Raid to Tamilnadu naam tamilar katchi executives house, NationalInvestigationAgency, NIA raid on SattaiDuraimurugan Trichy House,