தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விபத்துக்குள்ளான விமானம்! இராணுவ தளபதி உட்பட அனைவரும் பலி
நைஜீரியாவில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் இராணுவ தளபதி உட்பட 10 பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Abuja-விலிருந்து Kaduna-வுக்கு புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் Kaduna விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளதான நைஜீரிய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் நைஜீரிய இராணுவ தளபதி Ibrahim Attahiru, விமானக் குழுவினர் உட்பட 10 பலியானதாக நைஜீரிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவராததால், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து குறித்து முழு விபரம் மற்றும் இறந்தவர்களின் இறுதிசடங்கு குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.