உயிருடன் புதைக்கப்பட்ட பெண்... 11 நாட்களாக போராட்டம்! நள்ளிரவில் அலறல் சத்தம்

Brazil
By Balamanuvelan Aug 18, 2023 05:31 AM GMT
Report

பிரேசில் நாட்டில் கல்லறை ஒன்றிலிருந்து இரவில் அலறல் சத்தம் கேட்பதாகக் கூறப்பட்ட நிலையில், அந்தக் கல்லறையை தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுக்க சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

கல்லறைக்குள்ளிருந்து இரவில் கேட்ட அலறல் சத்தம்

பிரேசில் நாட்டிலுள்ள Riachao das Neves என்ற இடத்தில், Rosangela Almeida dos Santos (37) என்ற பெண் உயிரிழந்துள்ளார். அவரை சவப்பெட்டி ஒன்றில் வைத்து அடக்கம் செய்துள்ளார்கள் அவரது உறவினர்கள்.

ஆனால், Rosangela அடக்கம் செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன நிலையில், பெண் ஒருவர் அவரது கல்லறையிலிருந்து அலறல் சத்தமும், சவப்பெட்டியை தட்டும் சத்தமும் கேட்பதைக் கவனித்து, அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி, Rosangelaவின் உறவினர்கள் கல்லறையைத் தோண்டுவதென முடிவு செய்துள்ளனர். கல்லறையைத் தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுத்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

காத்திருந்த அதிர்ச்சி

அந்த சவப்பெட்டியைத் திறந்தபோது, Rosangelaவின் உடல் அடக்கம் பண்னப்பட்டபோது இருந்த நிலையிலிருந்து திரும்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூடவே, அவரது மூக்கு மற்றும் காதில் வைக்கப்பட்டிருந்த பஞ்சும் கீழே கிடந்துள்ளது.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண்... 11 நாட்களாக போராட்டம்! நள்ளிரவில் அலறல் சத்தம் | Night Screams From A Cemetery In Brazil

(Image: Globo G1)

Rosangelaவின் உடலும் குளிர்ச்சியாக இல்லாமல் அவரது உடலில் சூடும் இருப்பது தெரியவரவே, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிருடன் இல்லை என்று கூறியுள்ளார்கள்.

ஆனால், அவரது கைகளிலும் நெற்றியிலும் இரத்தம் வடிந்துள்ளதும், சவப்பெட்டியின் ஆணி அடிக்கப்பட்ட மூடி மேல் நோக்கித் தள்ளப்பட்டிருப்பதும் தெரிந்துள்ளது.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண்... 11 நாட்களாக போராட்டம்! நள்ளிரவில் அலறல் சத்தம் | Night Screams From A Cemetery In Brazil

 (Image: Globo G1) 

ஆக, Rosangela உயிரிழந்ததாக தவறுதலாக முடிவு செய்யப்பட்டு அவர் அடக்கம் பண்ணப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

சுயநினைவு வந்ததும், Rosangela சவப்பெட்டியின் மூடியைக் கையாலும் நெற்றியாலும் முட்டித் திறக்க முயன்றுள்ளார், அதனால்தான் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆக, 11 நாட்களாக Rosangela சவப்பெட்டிக்குள்ளிருந்து வெளியேற முயன்று கடைசியில் உயிரிழந்தது தெரியவந்துள்ளதால், அவரது உறவினர்கள் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர்.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண்... 11 நாட்களாக போராட்டம்! நள்ளிரவில் அலறல் சத்தம் | Night Screams From A Cemetery In Brazil

(Image: Globo G1)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US