அலறியடித்து ஓடிய மக்கள்! 13 பேர் உடல் கருகி பலி.. இரவு நேர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
தாய்லாந்து நாட்டில் இரவு நேர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியான நிலையில், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து 111 மைல் தொலைவில் உள்ளது மவுண்டன் பி எனும் இரவு நேர மதுபான விடுதி. இங்கு நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் உடல் கருகி பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
nypost
nypost
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், தீ பிடித்ததற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும், இதுவரை உயிரிழந்த அனைவரும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் தெரிவித்தனர்.
nypost
உள்ளூர் காட்சி ஊடகங்களில் மக்கள் தீயில் இருந்து தப்பி ஓடுவதையும், அவசரகால பணியாளர்கள் தீயை அணைப்பதையும் காண முடிந்தது. தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அதிகாரிகள் மூலமாக தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
PC: AFP via Getty Images
அத்துடன் நாடு முழுவதும் இதுபோன்ற பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும், சரியான அவசரகால வெளியேற்ற வழிகள் உள்ளனவா என ஆராயவும் உத்தரவிட்டார்.