இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து பலர் உயிரிழப்பு: டொமினிகன் குடியரசில் பரபரப்பு
டொமினிகன் குடியரசு தலைநகரில் இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து பலர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூரை இடிந்து விழுந்து விபத்து
டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு இரவு விடுதியின் கூரை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெட் செட் கிளப் அமைந்துள்ள இடத்தில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.
அவசர கால செயல்பாட்டு மையத்தின் இயக்குனர் ஜுவான் மானுவல் மெண்டஸ் கூறுகையில், பல்வேறு மருத்துவமனைகளுக்கு 134 ஆம்புலன்ஸ்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விசாரணை
இந்த பயங்கரமான கூரை சரிவுக்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படவில்லை.
கட்டிடத்தின் அமைப்பு தோல்வியடைந்ததற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |