பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புதிய விதி! கசிந்த முக்கிய தகவல்
பிரித்தானியாவில் தடுப்பூசி போட்ட பயணிகளுக்குக்கென புதிய விதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, தடுப்பூசி போட்ட பயணிகள் தொற்று பாதிப்பு இல்லை என்ற கொரோனா பரிசோதனை முடிவை காட்ட தேவையில்லை.
பிரித்தானியாவின் தடுப்பூசி போட்ட பயணிகள், கொரோனா பரிசோதனைகளை எடுக்காமல் அடுத்த மாதம் அரை-கால விடுமுறைக்கு சுற்றுலா செல்லலாம் என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ், பிப்ரவரி விடுமுறையின் போது 2 போடஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கான கொரோனா சோதனை முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவாக இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளது.
வழிகாட்டுதல் மாற்றம் குறித்த அறிவிப்பு, ஜனவரி 26ம் திகதி வெளியிடப்படும் என டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.