"அதற்கு இப்போ வாய்ப்பில்லை" எரிபொருள் நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய தகவல்
பிரித்தானியாவில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு தலைவிரித்துள்ள நிலையில், பெட்ரோல் பாம்புகளில் முக்கிய தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க எந்த திட்டமும் இல்லை என்று போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் எரிபொருள் மற்றும் HGV நெருக்கடி கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கு அப்பால் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் நிலைமை "மேம்படுத்தத் தொடங்குகிறது" என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியார்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் தொடர்ந்து பேசுகையில், மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முக்கிய தொழிலாளர்கள் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்னுரிமை பெற மாட்டார்கள், ஏனெனில் நிலைமை இப்போது "சீராக" உள்ளது என்று கூறியுள்ளார்.
Picture :Sky News
பல நாட்களாக தொடரும் இந்த குழப்பத்திற்கு மத்தியில், கடந்த சில தினங்களாக பெட்ரோல் ஸ்டேஷன்களில் நீண்ட வரிசையில் நின்று அவதிக்கு உள்ளாகும் வாகன ஓட்டிகள், எரிபொருள் நிரப்ப போராடும் போது ஏற்பட்ட மன உளைச்சலையும் ஏமாற்றத்தையும் புரிந்து கொண்டதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், பொருட்கள் மீண்டும் எப்போதும்போல சாதாரணமாக கிடைக்க தொடங்கியதால், நிலைமை மேம்படத் தொடங்கியுள்ளதாக எரிபொருள் தொழிற்துறையிலிருந்து நேர்மறையான அறிகுறிகள் கிடைத்துள்ளதாக போரிஸ் ஜான்சன் கூறினார்.
அதனால் "நிலைமை சீராகி வருகிறது, மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் எப்போதும்போல தங்கள் தொழிலைச் செய்ய வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம், அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், "எரிபொருளை மேலும் வழங்குவதாக அறிக்கை அளிப்பதாக" தெரிவித்துள்ளது.
இதனால், இந்த நெருக்கடியானது முடிவுக்கு வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் கிடைத்துள்ளதாக எரிபொருள் தொழில்துறை உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.