தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டுமே உணவு! சர்ச்சையை கிளப்பிய உணவகம்
அமெரிக்காவில் இயங்கும் உணவகம் ஒன்றில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலக நாடுகளில் பலவற்றிலும் தீவிரமடைந்து வரும் கொரோனாவுக்கு ஒரே தீர்வாக பார்க்கப்படுவது தடுப்பூசி தான்.
எனவே ஒவ்வொரு நாடும் தன் நாட்டு மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி வருகிறது.
மேலும் தடுப்பூசி என்பது பொது இடங்களில் நுழைவதற்கு கட்டாய தேவையாகிவிட்டது, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டும் பயணிக்க முடியும் என்ற சூழலும் வந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளமாட்டோம் என உறுதியுடன் இருக்கும் மக்கள் 'Anti-vaxxers' என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு எதிர்ப்பும், விமர்சனங்களும் வெடித்து வரும் சூழலில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கும் Basilico’s Pasta E Vino எனும் உணவகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கே உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.