இனி ரயிலில் ஸ்லீப்பர் பயணிகளுக்கும் தலையணை, போர்வை - கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஸ்லீப்பர் பயணிகளுக்கு தலையணை, போர்வை

முன்னதாக குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே போர்வை மற்றும் தலையணை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஸ்லீப்பர் பெட்டியில் பயணிப்பவர்களுக்கு போர்வை மற்றும் தலையணை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த திட்டம் அமுலுக்கு வருகிறது.
போர்வை மற்றும் தலையணை தேவைப்படும் பயணிகள் அதற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
Chennai Division Launches Sanitized Bedrolls from 1st Jan 2026
— DRM Chennai (@DrmChennai) November 28, 2025
Chennai Division, Southern Railway, is introducing a first-of-its-kind service to enhance comfort and hygiene for Sleeper Class passengers.
Travellers can request sanitized, bedrolls on an On-Demand – On-Payment basis pic.twitter.com/3rH7hqBLwZ
போர்வை ரூ.20க்கும் தலையணை ரூ.30க்கும் வழங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக 10 சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் கீழ்கண்ட 10 ரயில்களில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

நீலகிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
மங்களூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
மன்னார்குடி எக்ஸ்பிரஸ்
திருச்செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
பாலக்காடு எக்ஸ்பிரஸ்
சிலம்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
தாம்பரம்–நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
திருவானந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ஆலப்புழா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
மங்களூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |