குடிமக்கள் அல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை! பிரபல நாடு முக்கிய அறிவிப்பு
குடிமக்கள் அல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய கிழக்கு நாடான குவைத் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 7 ஆம் திகதி முதல் குடிமக்கள் அல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய இரண்டு வாரங்களுக்கு தடை விதிப்பதாக குவைத் அறிவித்துள்ளது.
பெற்றோர் மற்றும் குழந்தைகள் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கும், அவர்களுடன் வரும் வீட்டுப் பணியாளர்களுக்கும் விலக்கு அளிக்கப்படும் என்றும், நாட்டிற்குள் நுழையும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குவைத் தெரிவித்துள்ளது.
குவைத்-ல் புதன்கிழமை 756 புதிய கொரோனா தொற்றுகள் பதிவானது, இதன் மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,67,410 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,000-க்கும் அதிகமாக உச்சநிலையிலிருந்த தினசரி பதிவாகும் நோய்த்தொற்று எண்ணிக்கை தற்போது 300-க்கு கீழே குறைந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை அண்டை நாடான சவுதி அரேபியா, குடிமக்கள், தூதரக அதிகாரிகள், மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைத் தவிர 20 நாடுகளில் இருந்து வருபவர்கள் நாட்டிற்குள் நுழைய தற்காலிக தடை