வட கொரியாவில் மீண்டும் 2 ஏவுகணைகள் சோதனை!
வட கொரியா இன்று மேலும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
ஜப்பானிய கடற்பகுதிக்கு அருகில் உள்ள கடலில் வடகொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவியது. இம்மாதத்தில் மட்டும் இது நான்காவது முறையாக செய்யப்படும் ஏவுகணை சோதனையாகும்.
வரகோரியாவின் இந்த சோதனை குறித்து முதலில் தென் கொரியாவின் இராணுவம் அறிவித்தது, அதன் பின்னர் ஜப்பானால் உறுதிப்படுத்தப்பட்டது.
இன்று சோதனை செய்யப்படவை 'ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்', அவை ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாகப் பயணிக்கும் என்றும், அவை ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன என்று வடகொரியாவின் அரசாங்க ஊடகம் கூறியுள்ளது.
இன்றைய சோதனை தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் உயர்மட்ட அணுசக்தி தூதர்களுக்கு இடையே அவசரகால பேச்சுவார்த்தைகளைத் தூண்டியது, அவர்கள் 'வட கொரியாவின் அடுத்த நகர்வுகளில் மிகுந்த கவனம் செலுத்துவதாக' தெரிவித்தனர்.
கிம் ஜாங்-உன் தனது நாட்டின் பாதுகாப்பை அதிகரிப்பதாக உறுதியளித்த பின்னர், வட கொரியாவின் பாலிஸ்டிக் மற்றும் அணுசக்தி சோதனைகள் மீதான ஐ.நா.வின் தடையை கடந்த ஆண்டில் மேலும் மேலும் அடிக்கடி மீறியுள்ளார்.
இந்த மாதம் மட்டும் இது நாகாவது சோதனையாகும். இதற்கு முன், இரு தினங்களுக்கு முன்பாக ரயிலில் இருந்து இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.