மத்திய கிழக்கில் தற்போதைய பதட்டங்களுக்குக் காரணம் அவர்கள்... வடகொரியா கடும் விமர்சனம்
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை, இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாக வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றவாளிகள்
மேற்கத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய விரிவாக்கம் காரணமாக மத்திய கிழக்கில் தற்போதைய பதட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே குற்றவாளிகள் என்றும் வடகொரியா சாடியுள்ளது.
மேலும், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை வடகொரியா கடுமையாக கண்டிக்கிறது என்றும், இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களை வன்முறையால் நசுக்குவதற்கு நிகராகும் என்றும் அறிக்கை ஒன்றில் வடகொரியா குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மோதல் செயல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒருமனதாக கண்டனம் மற்றும் நிராகரிப்புக் குரலை எழுப்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானும் அணு ஆயுதம் ஏந்திய வட கொரியாவும் நட்புறவைப் பேணி வருகின்ற நாடுகள், மேலும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவது உட்பட பல தசாப்தங்களாக இராணுவ ஒத்துழைப்புடன் இரு நாடுகளும் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
தற்போதைய நெருக்கடியான சூழலுக்குப் பிறகு ஈரானுக்கு அழிக்கப்பட்ட ஏவுகணை உற்பத்தி வசதிகளை மறுசீரமைக்க உதவுவதில் வடகொரியா களமிறங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஈரானின் மற்றொரு நட்பு நாடான ரஷ்யாவிற்கு இராணுவ உதவியை அதிகரிக்க வட கொரியா கடந்த ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான வீரர்களையும், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களையும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |