சந்தேகத்திற்குரிய பீரங்கி தாக்குதல் நடத்திய வடகொரியா! பதற்றத்தில் கொரிய தீபகற்பம்
வடகொரியா சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்ச்சியாக பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளதாக சியோல் குற்றம்சாட்டியுள்ளது.
உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி வடகொரியா அவ்வப்போது அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
கடந்த வாரம் நடந்த மாநாட்டில், நாட்டின் ராணுவ சக்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிவித்தார். மேலும், வடகொரியாவின் இறையாண்மையை பாதுகாக்க அதிகாரத்திற்கான அதிகாரத்தை பயன்படுத்துவதாக கிம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் வடகொரியா தொடர்ச்சியான பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தென்கொரியாவின் தலைநகர் சியோலின் ராணுவம் தெரிவித்துள்ளது.
Photo Credit: AFP
இதுதொடர்பாக பேசிய சியோலின் அதிகாரிகள் குழு தலைமை கூறும்போது, பல விமான பாதைகளை கண்டறிந்துள்ளதாகவும், அவற்றின் மூலம் வடகொரிய பீரங்கிகளின் துப்பாக்கிச்சூட்டை புரிந்துகொள்ள முடிவதாகவும் தெரிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் 11 மணி வரை இந்த சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள சியோலின் அதிகாரிகள் குழு தலைமை, அமெரிக்காவுடன் இணைந்து ஒரு உறுதியான ராணுவ தயார்நிலையை தக்கவைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.
Photo Credit: AP
அத்துடன் சியோலில் உள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு அலுவலகம், பீரங்கித் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க நடத்திய கூட்டத்தில், வடகொரியாவின் செயல்பாடுகளுக்கு அமைதியாக இருந்து கடுமையான பதிலடி கொடுக்கும் நிலைப்பாட்டை தென்கொரியா மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, வடகொரியா ஏழாவது அணு ஆயுத சோதனையை நடத்த தயாராகி வருவதாக சியோல் மற்றும் வாஷிங்டன் குற்றம்சாட்டிய நிலையில், வடகொரியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது எனவும், இது விரைவான மற்றும் வலிமையான பதிலடியை கொடுக்க தூண்டும் செயல் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை துனைச் செயலர் வெண்டி ஷெர்மன் தெரிவித்துள்ளார்.