3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா - உலக நாடுகள் அதிர்ச்சி
North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனை
வட கொரியா கிழக்கு கடற்கரையிலிருந்து மூன்று மணி நேர இடைவெளியில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
இது கடந்த வாரம் நடந்த சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்ததால், உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகள்
முதல் ஏவுகணை வோன்சான் (Wonsan) பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு ஏவப்பட்டது. இது சுமார் 450 கிமீ தூரம் பறந்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏவுகணை மாலை 5.50 மணிக்கு அதே பகுதியில் இருந்து ஏவப்பட்டு 600 கிமீ தூரம் பறந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் வகையைச் சேர்ந்தவை என்றும், அவை ஜப்பானின் Exclusive Economic Zone-க்கு வெளியே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இந்த சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறுகின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் பீஜிங்கில் உள்ள தூதரக வழியாக அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கோயிசுமி, “வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள் ஜப்பான், பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேரடி அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வட கொரியா தனது அணு திட்டத்திற்கு எதிராக ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானத்தை நிராகரித்துள்ளது.
மேலும், அமெரிக்கா தலைமையிலான கடற்படை பயிற்சிகள் தான் தீவிர நிலையை உருவாக்குகின்றன என்று கிம் யோ ஜோங் (Kim Yo Jong) குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சோதனைகள், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. உலக நாடுகள், வட கொரியா உடனடியாக ஏவுகணை சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |