மீண்டும் அண்டை நாடுகளை மிரட்டிய வட கொரியா! அதிகாலையில் ஏவுகணை ஏவி அட்டூழியம்
வட கொரியா செவ்வாய்க்கிழமை அதிகாலை அதன் கிழக்கு கடலை நோக்கி குறுகிய தூர ஏவுகணையை ஏவியதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனைக்கு பிறகு ஐ.நா.வில் பேசிய வட கொரியாவின் தூதுவர், வட கொரியாவின் தற்காப்பு மற்றும் ஆயுதங்களை சோதிக்கும் உரிமையை யாராலும் மறுக்க முடியாது என கூறியுள்ளார்.
அதேசமயம், வட கொரிய மேற்கொண்ட குறுகிய தூர ஏவுகணை சோதனை குறித்து விழிப்புடன் இருப்பதாகவும், இதனால் அமெரிக்காவுக்கோ அல்லது அதன் நட்பு நாடுகளுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அமெரிக்க இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஏவுகணை சோதனை வட கொரியாவின் சட்டவிரோத ஆயுத திட்டத்தின் சீர்குலைக்கும் தாக்கத்தை காட்டுகிறது என அமெரிக்க இந்தோ-பசிபிக் Command கூறியுள்ளது.
தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், சியோலின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை ஏவுதல் மற்றும் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங்கின் சமீபத்திய அறிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள நோக்கங்களை ஆய்வு செய்ய தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், சியோலின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் இரண்டையும் வட கொரிய சோதனை செய்தது நினைவுக் கூரத்தக்கது.