வட கொரியா தனிமைப்படுத்திக் கொள்கிறது: தீபகற்பத்தில் அமைதி சீர்குலைப்பதாக தென் கொரியா குற்றச்சாட்டு
வட கொரியா சமீபத்திய செயல்களால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது.
வடக்கின் சமீபத்திய நடவடிக்கைகள் தீபகற்பத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி தொடர்ந்து பாதிக்கின்றன.
வட கொரியாவின் சமீபத்திய நடவடிக்கைகள் அந்த நாட்டை மேலும் தனிமைப்படுத்த மட்டுமே செய்யும் என தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக்-யோலின் அலுவலகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனைகள் ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிடையே கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனையை தொடர்ந்து, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
REUTERS
இந்நிலையில் வட கொரியா சமீபத்திய செயல்களால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது என தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக்-யோலின் அலுவலகம் திங்களன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் வடகொரியா தனது அச்சுறுத்தல்களை எவ்வளவு தீவிரப்படுத்துகிறதோ, அவ்வளவு ஆழமான வட கொரிய அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் மற்றும் வட கொரிய மக்கள் மிகவும் வறியவர்களாக மாறுவார்கள் என்று அலுவலக அதிகாரிகள் பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொரிய அரசாங்கம் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கும் என்றும், எத்தகைய நடவடிக்கைகளுக்கும் முழுமையாக தயாராக உள்ளது என்றும் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
EPA
கூடுதல் செய்திகளுக்கு: மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யா போருக்கு தயார்: நிலத்தடியில் மருத்துவமனையை கட்டி எழுப்பும் புடின்
வடக்கின் சமீபத்திய நடவடிக்கைகள் தீபகற்பத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பாதிக்கின்றன எனத் தெரிவித்துள்ளனர்.