அடங்க மறுக்கும் கிம்... தொடரும் அடாவடி! ஜப்பானை நோக்கி ஏவுகணைகளை ஏவிய வட கொரியா!
செப்டம்பர் 15ம் திகதி ஜப்பான் கடலை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா ஏவியதாக தென் கொரியா அதிகாரிகளை மேற்கோள் காட்டி Yonhap News தெரிவித்துள்ளது.
தென் கொரிய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 15ம் திகதி ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை நோக்கி வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரம் நள்ளிரவு 12:43 மணிக்கு வட கொரியாவிலிருந்து மற்றொரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாகவும், ஆனால், இரண்டாவது ஏவுகணை தாக்கிய தளம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, செப்டம்பர் 13ம் திகதி வட கொரிய கப்பல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது என அந்நாட்டு அரசு ஊடகமான KCNA அறிக்கை வெளியிட்டது.
இந்த ஏவுகணைகள் 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.
KCNA அறிக்கைக்கு பிறகு, வட கொரியாவின் கப்பல் ஏவுகணை சோதனைகளின் வெற்றி குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டால், அது பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு சாத்தியமான அச்சுறுத்தலாக மாறும் என்று ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் Nobuo Kishi குறிப்பிட்டார்.