ரஷ்யாவிற்கு KN-30 எனும் மிகப்பெரிய ஏவுகணையை வழங்கிய வட கொரியா
North Korea delivers Russia KN-30 Ultra-Heavy Ballistic Missile: ரஷ்யாவிற்கு KN-30 எனும் மிகப்பெரிய ஏவுகணையை வட கொரியா வழங்கியுள்ளது.
உக்ரேனிய உளவுத்துறை தகவலின்படி, ரஷ்யா தனது போர்த் தேவைகளுக்காக வட கொரியாவிலிருந்து KN-30 எனப்படும் புதிய வகை மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ரஷ்யா KN-23 மற்றும் KN-24 எனும் குறுகிய தூர ஏவுகணைகளை ஜூலை மாதத்தில் பெற்றிருந்தது.
இந்த KN-30 ஏவுகணை 2,500 கிலோ எடையுடைய வெடிகுண்டை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது ரஷ்யாவின் முக்கிய ஏவுகணையான Iskander-M-ஐ விட ஐந்து மடங்கு அதிக சக்தி கொண்டதாகும்.

உக்ரைன் தரப்பின் தகவலின்படி, சுமார் 90 வட கொரிய இராணுவ வீரர்கள் ரஷ்யாவின் Voronezh Oblast பகுதியில் KN-30 ஏவுகணை ஏவுதளங்களை இயக்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனால், இந்த ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா அல்லது வட கொரியாவின் நேரடி பங்களிப்பா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
KN-30-இன் மிகப்பெரிய வெடிகுண்டு மற்றும் உட்புகும் திறன் காரணமாக, உக்ரைன் படைகள் அமைத்துள்ள கோட்டைகளை உடைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த புதிய ஏவுகணை ஒப்பந்தம், ரஷ்யா தனது போர்த் தேவைகளில் வட கொரியாவின் ஆயுதங்களின் மீது அதிகமாக நம்பிக்கை வைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |