வீரியமெடுக்கும் கொரோனா.. தடுப்பூசிகள், மருந்துகள் இல்லை.. ராணுவத்தை களமிறக்கிய கிம் ஜாங் உன்!
வடகொரியாவின் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்துள்ளதால், இதுவரை 50 பேர் பலியாகியுள்ளதாகவும், ஒரு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் மூன்றே நாட்களில் 42 பேர் பலியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை அங்கு 12 லட்சத்து 13 ஆயிரத்து 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் கொரோனா தடுப்பூசிகள், வைரஸ் தடுப்பு மருந்துகள் வடகொரியா வசம் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் சிக்கல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவசர ஆலோசனை கூட்டத்தில் பேசிய கிம், கட்டளைகள் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்றும், மருந்தகங்களுக்கு சரியாக மருந்துகள் சென்று சேரவில்லை என்றும் கூறினார்.
இதனால் பியாங் யாங் நகரில் மருந்து விநியோகத்தை உடனடியாக நிலைப்படுத்த, மக்கள் ராணுவத்தின் சக்தி வாய்ந்த ராணுவ படைகளை ஈடுபடுத்த அவர் ராணுவ ஆணையத்திற்கு உத்தரவிட்டார். 24 மணிநேரமும் செயல்படுவதற்கான உத்தரவுகளை மருந்தகங்கள் கவனிக்க தவறியதால் இந்த பற்றாக்குறை ஏற்படுவதாக கிம் குறிப்பிட்டார்.