வடகொரியாவை விட்டு விலகியவர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் மூன்று மடங்கு அதிகரிப்பு
வடகொரியாவில் இருந்து விலகி, தென் கொரியாவுக்கு குடியேறியவர்கள் எண்ணிக்கை 2023ல் மட்டும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே ஆண்டில் 196 பேர்கள்
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின்னர் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டத்தை அடுத்து மாணவர்கள், பெண்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஆபத்தான முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
@reuters
கடந்த ஒரே ஆண்டில் 196 பேர்கள் வடகொரியாவில் இருந்து வெளியேறியுள்ளனர். வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆட்சி மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பதன் அடையாளமே இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்று தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.
2020 தொடக்கத்தில் சீனா உடனான எல்லையை மூடியதில் இருந்து வடகொரியாவில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்தது. மட்டுமின்றி, தப்பிக்க முயற்சிப்பவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதுவரை 31,000 மக்கள்
2021ல் வெறும் 63 பேர்கள் மட்டுமே வடகொரியாவில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆனால் 2019ல் இந்த எண்ணிக்கை 1,047 என இருந்தது. 2022ல் 67 என பதிவானது. ஆனால் கடந்த ஆண்டு வெளியேறியவர்களில் 10 பேர் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
@afp
1950களுக்கு பின்னர் வடகொரியாவில் இருந்து இதுவரை 31,000 மக்கள் வெளியேறியுள்ளனர். பெரும்பாலானவர்கள் சீனாவுக்குள் நுழைந்து மூன்றாவது நாடு வழியாக தென் கொரியாவில் புதிய வாழ்க்கையைத் தேடுகிறார்கள். மிகச்சிலரே அதிக ஆயுதம் ஏந்திய இராணுவமற்ற வலயத்தின் ஊடாக நேரடியாக தெற்கை அடைய முயற்சிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |