தென் கொரியாவை மொத்தமாக மிரள வைத்த கிம் ஜோங் உன்: மிரட்டல் விடுத்த ஒரு மணி நேரத்தில் சம்பவம்
வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணையானது தென் கொரியாவுக்கும் 60 கி.மீ தொலைவில் விழுந்துள்ளது.
திடீரென்று தென் கொரியா தரப்பில் போர் விமானத்தில் இருந்து ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தனர்.
வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று தென் கொரியா அருகே கடற்பகுதியில் விழுந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியா கடற்பகுதியில் வடகொரிய ஏவுகணை ஒன்று குறிவைக்கப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து தென் கொரியா உடனடியாக வான் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தங்கள் பக்கம் இருந்தும் வட கொரியாவை குறிவைத்து ஏவுகணை வீசியுள்ளனர்.
@reuters
வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணையானது தென் கொரியாவுக்கும் 60 கி.மீ தொலைவில் விழுந்துள்ளது. இதனையடுத்து போர் விமானத்தில் இருந்து மூன்று ஏவுகணைகளை தென் கொரியாவும் பதிலுக்கு ஏவியுள்ளது.
வட கொரியா தரப்பில் மொத்தம் 10 ஏவுகணைகள் ஏவியதாக கூறப்படுகிறது. ஒரு ஏவுகணையானது இரு நாட்டுக்கும் பொதுவான விவாதத்திற்குரிய நிலப்பரப்பில் விழுந்துள்ளது. இந்த நிலையிலேயே, திடீரென்று தென் கொரியா தரப்பில் போர் விமானத்தில் இருந்து ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தனர்.
உள்ளூர் நேரப்படி பகல் 8.55 மணிக்கு திடீரென்று வான் தாக்குதல் எச்சரிக்கை முழங்கியுள்ளது. பொதுமக்கள் உடனே வெளியேறும் பகுதிக்கு விரைந்துள்ளனர். 9.15 மணிக்கு பலத்த சத்தம் கேட்டதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.
ஆனால், தீவின் தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் தங்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின.
@reuters
இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டன. தென் கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.
மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ஆத்திரமூட்டலை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் வட கொரியா எச்சரித்திருந்தது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே வட கொரியா ஏவுகணைகளை ஏவியது தென் கொரியாவை மொத்தமாக மிரள வைத்துள்ளது.