வடகொரியா இராணுவ வீரர்கள் எவ்வளவு பலமானவர்கள்? முதன் முறையாக உலகிற்கு காட்டிய கிம்: வெளியான வீடியோ
வடகொரியாவில் இராணுவ வீரர்களின் சாகசத்தைக் கண்டு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னே வியந்து போய் பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது.
வடகொரியா அதன் இராணுவ பலத்தை அதிகரிக்க விரும்புகிறது.
இது குறித்து பாதுகாப்பு மேம்பாட்டுக் கண்காட்சியில் அந்நாட்டு அதிபர் கிம் கூறுகையில், எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத இராணுவத்தை உருவாக்கப் போகிறோம்.
தென்கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதப் போக்குமே வடகொரியா தனது இராணுவத்தை மேம்படுத்தக் காரணமாகிறது. தற்காப்புக்காகவே நாங்கள் ஏவுகணை பரிசோதனைகளைச் செய்கிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பாதுகாப்பு மேம்பாட்டுக் கண்காட்சியின் போது எடுக்கப்பட்டுள்ளது அதில், வடகொரியா இராணுவ வீரர்கள் எந்தளவிற்கு தங்களை பலமானவர்களாக வைத்திருக்கிறோம் என்பதை கிம் ஜாங் உன் செய்து காட்டுகின்றனர்.
ஒருவரை பலர் மர பலகையால் அடிப்பதும், அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதும், செங்கற்கள் மற்றும் இரும்பு ராடுகள் போன்றவற்றை தன்னுடைய பலத்தால் அடித்து நொறுக்குவது போன்றும் உள்ளது.
இதைக் கண்ட கிம் ஜாங் உன் வியந்து போய், ஒரு வித சிரிப்பை வெளிப்படுத்துகிறார். இந்த கண்காட்சி நிகழ்ச்சி அங்கிருக்கும் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது அப்போது நாட்டின் அமைதியை காக்க இரும்பு முஷ்டிகள் இருப்பதாக கூறி, அதில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிம் ஜாங் உன் எங்கள் நாட்டில் இராணுவ வீரர்கள் எந்தளவிற்கு பலமாக உள்ளனர் என்பதை பார்க்கும் படி உலகிற்கு மறைமுக எச்சரிக்கை விடுப்பதற்காகவே, இது ஒளிபரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் வடகொரியாவைப் பொறுத்தவரை அது ஒரு மர்மம் நிறைந்த நாடாகவே உள்ளது.
அங்கிருந்து ஒரு செய்தி வருகிறது என்றால், அது உலகிற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம், அல்லது தங்களை சீண்டும் நாட்டிற்கு ஒரு பதிலடி கொடுப்பது போன்று இருக்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இருந்து முதன் முறையாக தங்கள் நாட்டு இராணுவ வீரர்க்களின் வீரத்தை கிம் ஜாங் உன் உலகிற்கு காட்டுகிறார் என்றால், இதில் நிச்சயமாக ஒரு விஷயம் இருக்கும் என்று நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.