பிகினி உடை அணியாத வீராங்கனைகள்! அதிரடியாக விதிக்கப்பட்ட அபராதம்... எழுந்த சர்ச்சை
நார்வே நாட்டின் மகளிர் கைப்பந்து அணியினர் பிகினி உடை அணிந்து போட்டியில் கலந்து கொள்ளாத காரணத்திற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
BEACH HAND BALL விளையாட்டிற்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் பொதுவாக கலந்து கொள்ளும் வீராங்கனைகள் பிகினி உடைகளை தான் அணிவார்கள்.
இந்த நிலையில் இதில் கலந்து கொண்ட நார்வே மகளிர் அணி பிகினி உடை அணியாமல், அரைக்கால் ஆடை அணிந்து விளையாடினார்கள்.
இதை தொடர்ந்து போட்டி ஒருங்கிணைப்புக் குழு ஆயிரத்து 500 யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.