நேட்டோ பயிற்சியின் போது இராணுவ விமானம் விபத்து: 4 அமெரிக்க வீரர்கள் பலி
நார்வேயில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 4 அமெரிக்க வீரர்கள் பலியாகினர்.
நேற்று நேட்டோ பயிற்சியின் போது வடக்கு நோர்வேயின் தொலைதூரப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதில் இராணுவ விமானத்தில் இருந்த நான்கு அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டதாக நார்வே ஆயுதப் படைகள் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க மரைன் கார்ப்ஸுக்குச் சொந்தமான V-22B Osprey விமானம், நோர்வே பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டிருந்த Cold Response எனும் குளிர் கால இராணுவப் பயிற்சியில் பங்கேற்றுக்கொண்டிருந்தது.
பலத்த காற்று மற்றும் கனமழை உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாமல் போனதை அடுத்து, இன்று அதிகாலையில் மீட்புப் பணிகள் தரைவழியாகச் சென்றன.
PC: Norwegian armed forces
உள்ளூர் வானிலை முன்னறிவிப்புகளின்படி, அப்பகுதியில் பனிச்சரிவு அபாயமும் இருந்தது.
உள்ளூர் நேரப்படி "அதிகாலை 1.30 மணியளவில் (0030 GMT) பொலிஸார் விபத்து நடந்த இடத்தை அடைந்தனர். விமானத்தில் இருந்த நால்வரும் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது" என்று நோர்ட்லேண்ட் காவல்துறையின் நடவடிக்கையின் தலைவர் Ivar Bo Nilsson ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் உயிரிழந்த நால்வரும் ஆஸ்ப்ரேயின் அமெரிக்கக் குழுவினர் என்று தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்கான காரணத்தை விசாரித்துக்கொண்டிருக்கும் பொலிசார் மோசமான வானிலை காரணமாக தங்கள் வேலையை நிறுத்த வேண்டியிருந்தது, நிலைமைகள் மேம்பட்டதும் தங்கள் விசாரணையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
27 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 துருப்புக்கள் Cold Response பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த பயிற்சி தொடரும் என்று நோர்வேயின் இராணுவம் கூறியுள்ளது.