கட்டாயம் முடிவுக்கு வரும்... சார்லஸ் மன்னரின் ஆட்சி குறித்து தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு
மன்னர் சார்லஸ் மற்றும் கேட் மிடில்டனின் புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2024ல் கட்டாயம் சார்லஸ் மன்னர் முடி துறப்பார் என பிரஞ்சு தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய மாற்றம் ஒன்று நிகழும்
பிரஞ்சு தீர்க்கதரிசியான நாஸ்ட்ராடாமஸ், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல், விலைவாசி உயர்வால் ஏற்படும் நெருக்கடி உட்பட எதிர்காலம் தொடர்பில் 942 கணிப்புகளை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், 2024ல் பிரித்தானிய அரச குடும்பத்தில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழும் என்றும், கட்டாயத்தின் பேரில் மன்னர் முடி துறப்பார் என்றும் நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளார்.
மேலும், மன்னருக்கான அடையாளம் இல்லாத ஒருவர், அரியணை ஏறுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ள கணிப்புகள் அனைத்தும் நிறைவேறியுள்ள நிலையில், சார்லஸ் மன்னர் விவகாரத்திலும் நிறைவேறலாம் என்றே கருதுகின்றனர்.
2022ல் 96வது வயதில் ரணியார் இரண்டாம் எலிசபெத் காலமாவார் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தார். வயது உட்பட நாஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
அரச பொறுப்புக்கு வர வாய்ப்பில்லை
தற்போது சார்லஸ் மன்னர் முடி துறக்க கட்டாயப்படுத்தப்படுவார் என்றும், அரசராகும் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஹரி மன்னராகும் நிலை உருவாகும் என்றே நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
சார்லஸ் மன்னர் புற்றுநோய் சிகிச்சையில் உள்ளார். ஆனால் இதுவரை என்ன வகையான புற்றுநோய் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தவில்லை.
இதனிடையே, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனும் புற்றுநோய் சிகிச்சை முன்னெடுத்து வருகிறார். இதனால், வேல்ஸ் இளவரசர் வில்லியம் அரச பொறுப்புக்கு வர வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |