டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்கால் உலகில் அப்படி ஒரு சம்பவம் நிகழும்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு
எதிர்காலம் தொடர்பில் தமது கணிப்புகளை வெளியிட்டுவரும் பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் தொடர்பில் அதிரவைக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எலோன் மஸ்க் ஒரு நைட் டெம்ப்ளர்
மூன்றாம் உலகப் போரானது எல்லொன் மஸ்கால் ஏற்படும் சூழல் தெரிவதாக வாழும் நாஸ்ட்ராடாமஸ் நம்புகிறார். டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் உரிமையாளரான எலோன் மஸ்க் ஒரு நைட் டெம்ப்ளர் (Knight Templar) ஆக இருக்கலாம் எனவும் 2023ல் எதிர் கிறிஸ்து உலகிற்கு தோன்றுவார் எனவும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் Athos Salomé தெரிவித்துள்ளார்.
@getty
ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களின் தலைவர் Kirill கடந்த 2019 ஜனவரி மாதம் தெரிவிக்கையில், மக்கள் மொபைல் இணையத்தை பயன்படுத்துவதில் அதிக எச்சரிக்கை காட்ட வேண்டும் எனவும், அதனூடாக மனித இனத்தின் மீது உலகளாவிய கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும் எனவும் எச்சரித்திருந்தார்.
மேலும், எதிர் கிறிஸ்து என்பவர் உலகின் மொத்த இணையத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் எனவும், அதனூடாக மனித இனத்தை தம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவார் எனவும் Kirill கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தார்.
@getty
மொபைல் எதிர் கிறிஸ்துவாக இருக்கலாம்
இதே கருத்தையே தற்போது வாழும் நாஸ்ட்ராடாமஸ் Athos Salomé பதிவு செய்துள்ளார். மொபைல் என்பது எதிர் கிறிஸ்துவாக இருக்கலாம் எனவும், ஒரு மனிதனாக இல்லாமல், தொழில்நுட்பமாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மனித இனம் ஒரு நைட் டெம்ப்ளர் தலைமையில் இந்த எதிர் கிறிஸ்துவுக்கு எதிராக போராடும் எனவும், எதிர் கிறிஸ்து மனித உருவமாக அல்லாமல் புதிய தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றிலிருந்து வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@athos_salome
மட்டுமின்றி, எலோன் மஸ்கால் இதனால் உலகப் போருக்கான வாய்ப்புகள் உருவாகலாம் எனவும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் Athos Salomé பதிவு செய்துள்ளார்.
மேலும், கொரோனா பெருந்தொற்று தொடங்கி ஈரானில் இனப்படுகொலை வரையில் தொடர்பு இருப்பதாகவே Athos Salomé குறிப்பிட்டுள்ளார்.