ரெம்ப மோசமா விளையாடிட்டோம்! என்ன சொல்றது? தோல்விக்கு பின் புலம்பிய பொல்லார்ட்
இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில், ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் விளையாடிவிட்டோம் என்று மேற்கிந்திய தீவு அணியின் கேப்டன் கிரன் பொல்லார்ட் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை டி20 தொடரின் நேற்று நடைபெற்று சூப்பர் 12 இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து-மேற்கிந்திய தீவு அணிகள் மோதின.
இப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 55 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி அசால்ட்டாக இலக்கை எட்டிப்பிடித்தது.
இது குறித்து போட்டி முடிந்த பின்பு மேற்கிந்திய தீவு அணியின் கேப்டன் ஆன கிரன் பொல்லார்ட் கூறுகையில், இந்த போட்டி குறித்து எதையும் விளக்க முடியாது. ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் விளையாடிவிட்டோம்.
இருபினும் இதை மறந்துவிட்டு நாம் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். ஒரு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இது போன்று நடக்கும். நாம் அதற்கான தீர்வை காண வேண்டும்.
நாங்கள் உலகம் முழுவதும் நிறைய டி20 கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ளோம். இதை எல்லாம் பார்த்து தான் வந்திருக்கிறோம். இது போன்ற நாட்களை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். போட்டியில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இன்னும் நான்கு ஆட்டங்கள் உள்ளது. அதை எதிர்நோக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.