அவுட்டை நாட் அவுட்டாக்கிய மூன்றாவது நடுவர்? கடும் வாக்குவாதம் செய்த ராகுல்: வைரலாகும் வீடியோ
பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில், அழகான அவுட்டை மூன்றாவது நடுவர் நாட் அவுட் கொடுத்ததால், கே.எல்.ராகுல் களநடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் ஆடி வரும் பெங்களூரு அணி சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 9 ஓவர் முடிவில் 67 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அபினவ் பிஷ்னாயி வீசிய ஓவரில் பெங்களூரு அணியின் துவக்க வீரரான படிக்கல் அடித்து ஆட முற்பட்டார்.
Worst decision given by third umpire, no use of having such technology, its a waste of time to see ultra edge if they are going to give such poor decision. #IPL2O21 #royalchallengersbangalore #punjabkings pic.twitter.com/WvJ1ep3Isz
— Bhaskar (@avinona7213) October 3, 2021
அப்போது பந்தானது படிக்கல் பேட்டில் பட்டு, விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுலிடம் சென்றது. உடனே அவர் அவுட் கேட்ட போது, நடுவர் அவுட் இல்லை என்று கூற, உடனே ராகுல் ரிவ்யூ சென்றார்.
ரிவ்யூவில் பந்தானது பேட்டிலோ அல்லது க்ளவுசிலோ பட்டது போன்று ஸ்பைக் ஆனது. ஆனால் மூன்றாவது நடுவர் பேட்டில் படவில்லை என்று கூற, உடனே நாட் அவுட் அறிவிக்கப்பட்டது.
இதைக் கண்ட கே.எல்.ராகுல் அழகாக அவுட் தெரிகிறதே, அப்புறம் எப்படி என்று வாக்குவாதம் செய்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.