பேசி இனி பயனில்லை... செயல் தான்: இஸ்ரேலுக்கு எதிராக சீறும் ஈரான் ஜனாதிபதி
காஸாவில் ஏற்பட்டுள்ள போர் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொந்தளித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளால் பயனேதும் இல்லை
சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்படும் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் நிலையில், இனி பேச்சுவார்த்தைகளால் பயனேதும் இல்லை எனவும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஸா தொடர்பில் இனி பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை. செயலில் இறங்க வேண்டிய தருணம் இது என சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் செல்வதற்கு முன் தெஹ்ரான் விமான நிலையத்தில் ஜனாதிபதி ரைசி கூறியுள்ளார்.
அவசர கூட்டங்கள்
அத்துடன், இன்று இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் - காஸா போர் தொடர்பில் விவாதிக்க ரியாத்தில் ஒரு அசாதாரண இஸ்லாமிய-அரபு உச்சிமாநாட்டை சவுதி அரேபியா நடத்த உள்ளது.
@reuters
கூட்டாக முன்னெடுக்கப்படும் இந்த உச்சிமாநாட்டில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 11,100 கடந்துள்ள நிலையிலேயே சவுதி அரேபியாவில் அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர கூட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |