கடும் பனியால் உறைந்த ஆறு! புகைப்பட மோகத்தில் வெளிநாட்டில் உயிரிழந்த இந்திய தம்பதி
அமெரிக்காவில் இந்திய தம்பதி உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரிசோனாவில் வசித்து வந்த இந்திய தம்பதி
இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயணா முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனாவில் வசித்து வருகிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையொட்டி நாராயணா தனது மனைவி ஹரிதா 2 மகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். நாராயணாவுடன் சேர்த்து 3 குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.
dailythanthi
பனிப்பொழிவு
அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஆறு முழுவதும் பனியால் உறைந்திருந்தது. அப்போது குழந்தைகளை ஆற்றின் அருகே விட்டுவிட்டு நாராயணா, ஹரிதா மற்றொரு இந்தியரான கோகுல் ஆகிய 3 பேரும் உறைந்த ஆற்றின் மேல் நடந்து சென்றுள்ளனர்.
புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 3 பேரும் உறைந்த ஆற்றின் மீது நடந்த போது திடீரென பனியால் உறைந்த ஆற்றில் வெடிப்பு ஏற்பட்டு 3 பேரும் உறைந்த ஆற்றுக்குள் விழுந்தனர். பின்னர் தண்ணீரில் மூழ்கி உறைந்த பனியால் உடனடியாக உயிரிழந்தனர்.
பின்னர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று உடல்களும் மீட்கப்பட்டது.