தென் ஆப்பிரிக்கா நாடுகளை தொடர்ந்து பிரபல ஐரோப்பிய நாட்டில் புதிய கொரோனா மாறுபாடு கண்டுபிடிப்பு!
தென் ஆப்பிரிக்கா நாடுகளை தொடர்ந்து பிரபல ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் ‘Nu’ என்றழைக்கப்படும் புதிய கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, புதிய கொரோனா மாறுபாடு பாதிப்புடன் இரண்டு சந்தேகத்திற்கிடமான தொற்றுகள் பெல்ஜியத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன.
தென் ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா மாறுபாடு தடுப்பூசிகளைத் தவிர்ப்பதற்கு 'அதிக சாத்தியம்' இருக்கலாம் என பிரித்தானியா நிபுணரும் பேராசிரியருமான நீல் பெர்குசன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்து விடாமல் தடுக்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.
தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங் மற்றும் போட்ஸ்வானாவில் இதுவரை 59 பேருக்கு ‘Nu’ தொற்று பாதிப்பு இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெல்ஜியத்தில் கண்டறியப்பட்டது புதிய கொரோனா மாறுபாடு என உறுதிப்படுத்தப்பட்டால், ‘Nu’ தொற்று பதிவான முதல் ஐரோப்பிய நாடாக பெல்ஜியம் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.