எங்கள் நாட்டு அணு ஆயுதங்களின்.... வடகொரிய அதிபர் கிம்க் ஜாங் அதிரடி முடிவு
வடகொரியாவின் அணு ஆயுதங்களின் திறனை மேலும் வலுப்படுத்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் முடிவெடுத்துள்ளார்.
வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது. அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு செவிசாய்க்காமல் மேலும் மேலும் அந்த நாடு அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியாவின் 90-வது ராணுவம் நிறுவன தினத்தையொட்டி தலைநகர் பையாங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இப்பேரணியின் போது ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று கிம் ஜோங் உன் பேசுகையில், நமது நாட்டின் அணு ஆயுத திறன்களை அதிகபட்ச வேகத்தில் வலுப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
நமது நிலத்தில் விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டால் நம்முடைய அணு ஆயுதங்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.