அணு ஆயுதங்களுடன் எப்போதும் தயாராக இருக்கிறோம்: சூளுரைத்த விளாடிமிர் புடின்
மேற்கத்திய நாடுகள் சீண்டினால், தாக்குவதற்கு எப்போதும் தயாராகவே இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சூளுரைத்துள்ளார்.
ரஷ்யா போருக்கு தயார்
ரஷ்யாவின் வருடாந்தர வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்துகொண்டு பேசிய புடின், சீனாவை புகழ்ந்துள்ளதுடன் பிரித்தானியாவை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழலிலும் அணு ஆயுதங்களுடன் ரஷ்யா போருக்கு தயார் நிலையிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 1945ல் நாஜி ஜேர்மனியை தோற்கடித்ததன் நினைவாக முன்னெடுக்கப்படும் கொண்டாட்டமாக ரஷ்யா முழுவதும் மே 9ம் திகதி அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த நாளில் ரஷ்யாவின் ராணுவப்பெருமையை உலகிற்கு உணர்த்தவே விளாடிமிர் புடின் கவனம் செலுத்தி வந்துள்ளார். நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த நிகழ்வில், முக்கிய கட்டமாக தலைநகர் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அணிவகுப்பு முன்னெடுக்கப்படும்.
ஆனால் தொடர்ந்து 2 ஆண்டுகளாக ஒரே ஒரு டாங்கி மட்டுமே அனுவகுப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் முன்னிலையில் பேசிய புடின், இரண்டாம் உலகப் போர் தந்த பாடங்கள் குறித்தும் நமது நேச நாடுகள் குறித்தும் நாம் மறந்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
யாரையும் அனுமதிக்காது
வெறும் 7 நிமிடங்களில் வெற்றி நாள் பேருரையை விளாடிமிர் புடின் முடித்துக் கொண்டுள்ளார். மட்டுமின்றி, ரஷ்யாவுடன் போரிட்ட பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் குறித்தும் அவர் எதையும் குறிப்பிடவில்லை.
மேலும், உக்ரைனில் போரிடும் வீரர்களை புகழ்ந்து பேசிய புடின், மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியால் பல நாடுகள் போரிட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், உலகளாவிய மோதலைத் தடுக்க ரஷ்யா எல்லாவற்றையும் செய்யும், ஆனால் ரஷய மக்களை அச்சுறுத்த யாரையும் அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பல்வேறு பிராந்தியங்களில் அணிவகுப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்வதாக ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாம் உலகப் போரில் 27 மில்லியன் மக்களை சோவியத் ரஷ்யா இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |