மார்பக புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆண் நர்ஸால் காத்திருந்த அதிர்ச்சி! தூக்க கலக்கத்தில் கனவா, நிஜமா என குழம்பிய பரிதாபம்
அமெரிக்காவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மருத்துவமனையில் பாலியல் தாக்குதல் நடத்திய ஆண் நர்ஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
லாஸ்வேகாஸை சேர்ந்த 54 வயது கேத்தரீன் பெர்னட் என்ற பெண்ணுக்கு தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.
அவர் கூறுகையில், கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து புற்றுநோயுடன் போராடி வருகிறேன். நான் சன்ரைஸ் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டேன், அங்குள்ள படுக்கையில் இருந்து கண்விழித்தேன்.
அப்போது மெடிரோஸ் (31) என்ற ஆண் நர்ஸ் என் மீது அமர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன், இதோடு என் மீது கை வைத்து பாலியல் தாக்குதல் நடத்தினார். முதலில் இது கனவா என தூக்க கலக்கத்தில் நினைத்தேன், ஆனால் அது கனவு இல்லை, உண்மை என உணர்ந்தேன் என அதிர்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மெடிரோஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மெடிரோஸால் வேறு சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
பெயில் தொகையாக மெடிரோஸ்கு $3,000க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட உத்தரவு வரை அவர் நர்ஸ் பணியை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.