பிரித்தானியாவில் மர்மமான முறையில் இறந்துகிடந்த தம்பதி
பிரித்தானியாவில் வயதான தம்பதியர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
டார்லிங்டன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியர் இறந்துகிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து டர்ஹாம் பொலிஸார் அங்கு சென்று, மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பிரையன் ஸ்வாடில் (86) மற்றும் ஓல்வினின் (84) உடல்களை கைப்பற்றினர்.
இதனையடுத்து எதிர்பாராத மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் தம்பதியர் ஓய்வூதியதாரர்கள் என்று தெரிய வந்தது.
அக்கபக்கத்தினர் உயிரிழந்த பிரையன் ஒரு சிறந்த நபர் என்று கூறினர். இதற்கிடையில், மே 9 மற்றும் மே 17 ஆகிய திகதிகளுக்கு இடையில் அவர்களைப் பார்த்த எவரிடம் இருந்தும் தொடர்புகொள்ள அதிகாரிகள் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
டர்ஹாம் அதிகாரி ஒருவர் தனது அறிக்கையில், தம்பதியர் இறந்ததற்கான சரியான சூழ்நிலைகளை நிறுவ அதிகாரிகள் பணியாற்றுவதால் விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |