கொரோனாவால் படுத்த படுக்கையான மூதாட்டி! 6 வாரங்களுக்கு பின் நடந்த அதிசயம்.. ஆச்சரியத்தில் மருத்துவர்கள்
அமெரிக்காவில் கோமாவுக்கு சென்ற மூதாட்டி ஒருவர் 6 வாரங்களுக்கு பிறகு மீண்டு வந்த சம்பவம் மருத்துவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் தாக்கி வருகின்றது. அந்த வகையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பயங்கர வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரில் வசிக்கும் மூதாட்டி ஒருவருக்கு கடந்த செப்டம்பர் மாத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து வரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கோமாவிற்கு சென்றுவிட்டார். அவரது உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், நுரையீரல் முற்றிலுமாக சேதமடைந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். எனினும் வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
கிட்டத்தட்ட 6 வாரங்களாக வெண்டிலேட்டர் ஆதரவுடன் இருந்த வந்த நிலையில் திடீரென ஒருநாள் அவருக்கு சுயநினைவு ஏற்பட்டுள்ளது. இது முற்றிலும் எதிர்பாராத நிகழ்வு என்று மருத்துவர்கள் கூறினர்.
வெண்டிலேட்டர் ஆதரவு தேவை இல்லை என்று அதை அகற்ற முடிவு செய்தனர். அந்த மூதாட்டி கோமாவில் இருந்து எழுந்த சம்பவம் மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.