கொரோனா பீதி ஒருபக்கம்... டோக்கியோ நகரை உலுக்கவிருக்கும் புதிய நெருக்கடி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வில்லனாக இன்னொரு புதிய சிக்கல் உருவாகி வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோவில் வழக்கத்துக்கு மாறாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முதலில் கொரோனா அச்சுறுத்தலால் போட்டிகள் தொடங்க தாமதமானது, தொடர்ந்து தாங்க முடியாத வெப்பம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிப்போனது.
ஆனால் இப்போது சூறாவளியுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மணிக்கு 56 மீற்றர் அளவுக்கு காற்று வீசும் எனவும், செவ்வாய்க்கிழமை முதல் கனமழை ஜப்பானை தாக்க வாய்ப்பு என வானிலை ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அதுவும் டோக்கியோவை நோக்கி இந்த புயல் நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே திங்கட்கிழமை நடத்த திட்டமிட்டிருந்த படகு போட்டிகளை ஞாயிறன்று நடத்த முடிவு செய்துள்ளனர்.
புயலுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் பல போட்டிகள் தாமதமாகலாம் எனவும், பல மணி நேரம் போட்டிகள் நடத்த முடியாமல் ஸ்தம்பிக்கும் நிலை கூட வரலாம் என வானிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஜப்பானில் கோடை காலம் என்பது கடுமையான வெப்ப அலை வீசும். 2018ல் மட்டும் வெப்ப அலைக்கு ஜப்பானில் 1,000 பேர்கள் மரணமடைந்தனர்.
கடந்த வாரம், ஒரு கடற்கரை கைப்பந்து பயிற்சி அமர்வு ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது, வீரர்கள் தங்கள் கால்களுக்கு மணல் மிகவும் சூடாக இருப்பதாக புகார் கூறியிருந்தனர்.
இதனிடையே, கொரோனா காரணமாக ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரு வருடம் தாமதமானதும், அரங்கத்தின் விலை மற்றும் வடிவமைப்பு குறித்து பிரச்சினைகள் ஏற்பட்டதும்,
துணை பிரதமரும் நிதியமைச்சருமான டாரோ அசோ, ஜப்பான் மக்கள் என்ன சபிக்கப்பட்டவர்களா என ஆவேசமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.