ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட டோக்கியோ ஒலிம்பிக் மூத்த அதிகாரி! என்ன காரணம்? நீடிக்கும் மர்மம்
ஜப்பானில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் மூத்த அதிகாரி ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
52 வயதான Yasushi Moriya என்ற 2020 டோக்கியோ ஒலிம்பிக் மூத்த அதிகாரியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
ரயில் வரும் போது தண்டவாளத்தில் விழுந்து Yasushi Moriya தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக நாட்டில் தற்கொலை வழக்குகளில் அதிகரிப்பு இருப்பதாக 2021 ஜனவரி மாதம் ஜப்பானிய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
2020 ஆம் ஆண்டில் 20,919 பேர் தற்கொலை செய்து கொண்டனர், இது முந்தைய ஆண்டை விட 3.7% அதிகமாகும்.
குறிப்பாக, பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
தற்கொலைகள் அதிகரிப்புக்கு கொரோனா முக்கிய காரணங்களில் ஒன்று என விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் அப்போது கூறியிருந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.