தினமும் ரூ 1000 கோடி இழப்பு... சமாளிக்க முடியாமல் திணறும் இந்திய அரசாங்கம்
ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லாமல் தொடர்வதற்காக இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) பெரும் இழப்பை ஏற்றுக்கொண்டுள்ளன.
ரூ 2 லட்சம் கோடி
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தினமும் சுமார் 1000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து வருவதாகவே தெரிய வருகிறது.

இந்த இழப்பு 2026-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ 2 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் தொடங்கியதன் பதிலடியாக, எண்ணெய் வர்த்தகத்திற்கு முதன்மையான வழித்தடமான ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு முடக்கப்பட்டது.
இதனால் கச்சா எண்ணெய் விலை தடாலடியாக உயர்ந்தது. இந்த உயர்வை உள்நாட்டு விலையில் பிரதிபலிக்காமல் இருக்க, இந்தியாவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை எதிர்பாராமல் விலையை நிலையாக வைத்துள்ளன.
இதன் காரணமாகவே நாளுக்கு ரூ 1000 கோடி அளவுக்கு இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. மட்டுமின்றி, 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியாத நெருக்கடியும் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு ஏற்பட்டது.
அதேவேளையில் இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான எவ்விதமான மானிய திட்டத்தையும் அல்லது பெயில்அவுட் திட்டம் எதுவும் இதுவரையில் அறிவிக்கவில்லை.

ஆனால், இந்த இழப்புகள் நீண்டகாலம் நீடித்தால், அரசாங்கத்திற்கு அது பெரும் சவாலாக மாறும் என்பதும் அனைத்து அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு
தற்போது ஏற்பட்டுவரும் இழப்பை எதிர்கொள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏற்படலாம் அல்லது புதிய வரி அல்லது செஸ் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 5 மாநில தேர்தல் முடிவடைந்துள்ளதால், இனி விலை உயர்வை ஏற்படுத்த அரசாங்கத்திற்கு தயக்கம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
[
]
இந்த நிலையில், எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் அமல்படுத்துமாறும், பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை தேவைக்கு அதிகமாகக் குறைக்குமாறும்,
பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் தற்போது 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பும், 60 நாட்கள் இயற்கை எரிவாயு இருப்பும் 45 நாட்கள் எல்பிஜி (சமையல் எரிவாயு) இருப்பும் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |