பிரித்தானியாவில் ஒமைக்ரானால் 25,000 முதல் 75,000 இறப்புகள் ஏற்படக்கூடும்! நிபுணர்கள் குழு எச்சரிக்கை
கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாவிட்டால் ஒமைக்ரானால் பிரித்தானியாவில் 25,000 முதல் 75,000 இறப்புகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
லண்டன் School of Hygiene & Tropical Medicine (LSHTM) நிபுணர்கள், சோதனைத் தரவைப் பயன்படுத்தி ஒமைக்ரான் எவ்வாறு பரவக்கூடும் என்பதை கணித்துள்ளனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ‘பிளான் பி’-யை விட கூடுதலாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஒமைக்ரான் மாறுபாடு அடுத்த ஐந்து மாதங்களில் பிரித்தானியாவில் 25,000 முதல் 75,000 இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளனர்.
கூடுதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2021 ஜனவரி கொரோனா அலையின் போது ஏற்பட்ட பாதிப்பை விட, ஒமைக்ரானால் பிரித்தானியாவில் அதிகமானோர் பாதிக்கப்படலாம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று அது நிபுணர்கள் குழு அறிவுறுத்தி இருக்கிறது.
மிகவும் நம்பிக்கையான சூழ்நிலையில் கூட இந்த தொற்று பாதிப்பால் தினசரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2000 மேல் இருக்கும்.
1 டிசம்பர் 2021 முதல் 30 ஏப்ரல் 2022-க்கு இடையில் 1,75,000 மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் மற்றும் 24,700 பேர் இறப்புக்கலாம் என நிபுணர்கள் குழு கணிப்பு தெரிவிக்கிறது.
முகக் கவசம் அணிவது, வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போதுமானதாக இருக்காது என்றும், 2022 ஜனவரி மாதத்தில் தினசரி 2,400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குழு கூறியுள்ளது.