டெல்டாவை விட மோசமானது! புதிய கொரோனாவிற்கு பெயர் வைத்த WHO: எச்சரிக்கை தகவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸிற்கு ஒமிக்ரான் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் வகைக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இந்த வகை வைரசிற்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ், தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் வேகமாக பரவக் கூடியது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதை 'கவலைக்குரிய வைரஸ் வகை' என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் என இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதர வைரஸ் மற்ற கொரோனா வகைகளை விட இந்த வைரஸ் வேகமாக பரவும், தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.